இலங்கை சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

978

சாரதிகளுக்கு..

2020 மார்ச் 10ஆம் திகதியன்று காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருப்பவர்கள் அதனை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த அனுமதிபத்திரங்களை புதுப்பிக்க ஏப்ரல் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அந்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படி காலம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.