வவுனியா மகாறம்பைக்குளம் திருஞான சம்பந்தர் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் இறுதிப்போட்டி!!(படங்கள்)

311

வவுனியா மகாறம்பைக்குளம் திருஞான சம்பந்தர் வித்தியாலய 2014ம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் இறுதிப்போட்டி நேற்று (31.01) நடைபெற்றது.

சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று அணிகளுக்கிடையிலான போட்டியில் சேரன் அணி 1ம் இடத்தையும், சோழன் அணி 2ம் இடத்தையும், பாண்டியன் அணி 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இவ் விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மகாறம்பைக்குள பொலிஸ் அதிகாரி திரு.ரணசிங்க அவர்களும் வவுனியா தெற்கு வலய கல்வி அதிகாரிகள் சிலர் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

1ம் இடம் பெற்ற சேரன் அணிக்கு வெற்றிக்கேடயத்தை திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், 2ம் இடம் பெற்ற சோழன் அணிக்கு பாடசாலையின் அதிபர் திரு.கருணாநிதி அவர்களும், 3ம் இடம் பெற்ற பாண்டியன் அணிக்கு CDB வங்கி அதிகாரியும் வழங்கினர்.

-வே.மதுஜன்-

1 2 3 4 5 6 8 9 10 11 12 13