கொழும்பில் சிகை அலங்கரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா : 25 பேருக்கு பரவியிருக்கலாம் என அச்சம்!!

576

கொரோனா..

கொழும்பு-12, கெசல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த 25 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என மேலும் சந்தேகம் வெளியிப்பட்டுள்ளது.

எனவே அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான 310 பேர் இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 104 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் பல பகுதிகளில் சலூன்களை உடனடியாக மூடுமாறு சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.