யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்று கொண்டிருந்தவர் திடீர் மரணம்!!

619

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தேசிய நாழிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனைப்பந்தி – நாவலர் வீதியில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் இன்று மாாலை திடீரென்று வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

ஓட்டுமடத்தைச் சேர்ந்த 68 வயதான தம்பு வாமதேவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உறவினர் வீடொன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

1990 அம்பியூலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டு, அங்கு அம்பியூலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.