இலங்கையில் கொரோனா அ ச்சுறுத்தலுக்கு மத்தியில் மேலும் இரண்டு நோய் பரவும் ஆபத்து!!

543

மேலும் இரண்டு நோய்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு மேலதிகமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களிடம் அறிவித்துள்ளது.

அந்த நோயின் பரவலை குறைப்பதற்காக உரிய துறையினர் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய 3 நோய் தொற்றினதும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.

எனினும் அவை இலங்கை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தை நோக்கி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.