தனிமைப்படுத்தும் நிலையங்கள்..
வெளிநாட்டில இருந்து இலங்கை வரும் நபர்களின் தேவைக்கு ஏற்ப சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஆடம்பர வசதிகள் தேவையான நபர்கள் பணம் செலுத்தி தனிமைபடுத்தலில் ஈடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வரும் நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த ஹோட்டல் அறைகளுக்கான அனைத்து வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 7500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். சாதாரணமாக குறித்த ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்காக நாள் ஒன்றுக்கு 35000 ரூபாய் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையின் பல நட்சத்திர ஹோட்டல்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனைத்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் இராணுவ கண்கானிப்பின் கீழ் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இராணுவத்தினால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்ந்தும் செயற்படவுள்ளது. அதற்காக எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-