வவுனியா பம்பைமடுவில் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

598

கொரோனா..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வவுனியா மகாகச்சகொடி பகுதியைச் சோந்தவர்கள் உட்பட 216 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் தென்பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 35 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் ஓருவரின் தந்தையான,

செவனகல எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குறித்த நபரை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.