கொரோனாவால் பலி..
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 755 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.