யாழில் இறுக்கமான நடைமுறைகள் : மாவட்ட அரசாங்க அதிபர்!!

591

யாழில்..

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் எதிர்நோக்கும் பாஸ் நடைமுறை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

யாழ். வணிகர் சங்கத்தினருக்கும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாத வண்ணம் சில நடைமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.