உயர்தர பரீட்சை திகதியில் மாற்றமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

1013

உயர்தர பரீட்சை..

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை பிற்போடுவதா இல்லையா என்பது தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமைக்கமைய எதிர்காலம் தொடர்பில் இப்போதே கூற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒகஸ்ட் மாதம் நடைபெறும் பரீட்சை தொடர்பான தீர்மானம் தற்போது எடுப்பது அவசரமில்லை. மாணவர்களுக்கு வழங்க கூடிய நியாயமான தீர்மானத்தை எடுப்பதற்கு நான் பின்வாங்குவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் உயர்தர பரீட்சையை உரிய முறையில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கு ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-