பாண் வியாபாரிகளுக்கு..
கொழும்பு நகரில் பாண் வியாபாரி கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளமையினையடுத்து நடமாடும் பாண் வியாபாரிகளுக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான அவசர கலந்துரையாடல் வவுனியா சுகாதார அதிகாரி பணிமணையில் இன்று (06.05.2020) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது காலாவதியான பாண்,பணிஸ் விற்பனை , ஜாம் பணிசினுள் ஜாம் இல்லை , உரிய முறையில் வேகாத பாண், பணிஸ் விற்பனை செய்வதாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிலும் பேரிலும் கோவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக நடமாடும் பாண் வியாபாரத்தினை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் 20க்கு மேற்பட்ட நடமாடும் பாண் வியாபாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.