வவுனியா மாவட்டத்தின் கொவிட் 19 மற்றும் சமகால நிலமை தொடர்பில் விசேட கூட்டம்!!

620

விசேட கூட்டம்..

கொவிட்-19 பாதிப்பு மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், சமகால நிலமைகள் தொடர்பிலும் விசேட கூட்டம் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(06.05.2020) பிற்பகல் 2.30 இற்கு நடைபெற்றது.

இதன்போது கொவிட் 19 தொடர்பில் வவுனியாவின் தற்போதைய நிலை, கொவிட் பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகள், அரசாங்கத்தின் நிவாரண உதவிகள், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையபடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், இ.இந்திரராசா, ம.தியாகராசா, எம்.பி.நடராஜா,

உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், இராணுவ அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.