11ம் திகதி தொடக்கம்..
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி (11.05.2020) தொடக்கம் சில நடைமுறைகளை அமுல்ப்படுத்தவுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
நடைமுறைப்படுத்தவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரசபை தலைவர்,
கொரோனா வைரஸ் அச்சத்தினையடுத்து ஊடரங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா நகரில் பல பகுதிகளில் விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டு பரவலான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தோம்.
தற்போது மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதினால் வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவதுடன் கோழி, மீன், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்குறிய அனுமதிகளை எதிர்வரும் 11ம் திகதியுடன் நிறுத்தப்படும் என்பதுடன்,
மேலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மரக்கறிகளை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வீதியோரங்களில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.