வவுனியா நகரசபையில்..
கொரோனா வைரஸ் தாக்கம் அ ச்சம் காரணமாக வவுனியா நகரசபையில் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
வவுனியா நகரசபைக்கு சேவையினை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் , நகரசபை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட செயற்றிட்டமொன்று முன்னேடுக்கப்பட்டுள்ளது.
கதைக்கும் சமயத்தில் எச்சில் மற்றும் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வாடிக்கையாளருக்கும் ஊழியருக்குமிடையில் பொலித்தீன் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.