திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் : அரசாங்கம் அறிவிப்பு!!

841

இயல்பு நிலைக்கு..

தற்போது திட்டமிட்டுள்ளதனை போன்றே எதிர்வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு பொது மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் முறை தொடர்பில் அனைத்து பிரிவுடனும் சுகாதார அதிகாரிகள் தற்போது கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரேனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா குழுக்கள் ஊடாகவே பரவுகின்றன.

அந்த குழுக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொழும்பு, களுத்துறை, புத்தளம் பகுதிகளில் உட்பட கொரோனா சமூக பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையை விடவும் கொ டூரமாக கொரோனா பரவிய நாடுகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே வெசாக் காலப்பகுதியில் கொரோனாவினால் மிக மோசமான நிலைமை ஒன்று ஏற்படவில்லை என்றால் நிச்சியமாக நாடு முழுவதும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-