அரசாங்கம் வழங்கிய நிவாரண நிதியை நன்கொடையாக வழங்கிய தாய்!!

447

நிவாரண நிதியை..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பெருமளவு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில் அம்பலந்தோட்டையில் அரசாங்கம் தனக்கு வழங்கிய 5 ஆயிரம் ரூபாவை வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்திற்கு தாய் ஒருவர் வழங்கியுள்ளார்.

தன்னை தனது பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்வதனால் அந்த பணத்தை வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்திற்கு அவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை, பல்வேறு மரக்கறிகளை பயிரிட்ட விவசாயிகளினால் அதனை விற்பனை செய்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊரடங்கு சட்டம் காரணமாக வர்த்தம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.