அம்மா, அப்பாவை பார்த்துக்கொள் : சகோதரனுக்கு செய்தி அனுப்பிவிட்டு த ற்கொ லை செய்த மருத்துவர்!!

578

மருத்துவர்..

தமிழகத்தில் பெற்றோரை பார்த்து கொள்ளும் படி சகோதரனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு பயிற்சி மருத்துவர் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதன் படி சென்னை மெரினா கடற்கரையில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடல் ச ந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கியது. இது குறித்து கடற்கரை பகுதியில் பா துகாப்பு பணியில் இருந்து பொலிசார் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மெரினா பொலிசார் இறந்த இளைஞர் குறித்து தீ விர வி சாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, சியாமலா கார்டன் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (35) என்பது தெரியவந்தது. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால், அர்ஜூன் தனது குடும்பத்தினரிடம் ச ண்டை போட்டுவிட்டு சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அர்ஜூன் நேற்று முன்தினம் 3 மணிக்கு தனது விலை உயர்ந்த காரை எடுத்துக் கொண்டு கடலில் விழுந்து த ற்கொ லை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து மெரினா கடற்கரை பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் காரை கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தி விட்டு தனது சகோதரனுக்கு வாட்ஸ் அப்பில் நான் எடுக்கும் த ற்கொ லை முடிவுக்கு யாரும் காரணமல்ல அப்பா, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கோ என்று கூறி கார் இருக்கும் இடத்தையும் குறுஞ்செய்தி மூலம் தன்னுடைய சகோதரனுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மக்கள் நடமாட்டம் இல்லாததால் அர்ஜுன் கடலில் இறங்கி த ற்கொ லை செய்து கொண்டது வி சாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், திருமணம் ஆகாத விரக்தியில் த ற்கொ லை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.