வவுனியாவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ள பேரூந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்!!

530

பேரூந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்..

ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்பட்டதும் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ள அரச பேரூந்துகளுக்கு கொவிட் 19 தொடர்பான வழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சென்ற சுகதார பரிசோதகர்கள் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக பேரூந்துகளின் சுகாதார தன்மை தொடர்பாக பார்வையிட்ட சுகாதார பரிசோதகர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த ஸ்டிக்கர்களை பேரூந்துகளில் காட்சிப்படுத்தலுக்காக ஒட்டினர்.

முன்னதாக வவுனியாவின் புதிய மற்றும் பழைய பேரூந்து நிலையங்கள் கிருமி நீக்கி மருந்துகள் விசிறப்பட்டு தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகள் விசேட அதிரடிப்படை மற்றும் நகரசபை ஆகியவற்றின் துணையுடன் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.