போக்குவரத்து சேவைகள்..
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார்துறை பேருந்துகளுக்கு இது பொருந்துமாகும். ஏற்கனவே 3 அடிக்கு ஒரு ஆள் என்ற அடிப்படையிலான சமூக இடைவெளியில் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இதற்கு தனியார்துறை தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுப்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.