ரயிலுக்காக..
ரயிலில் பயணிப்பதற்கு முன்னர் ரயில் ஆசனம் ஒதுக்கிக் கொள்ளாத பயணிகளை திருப்பி அனுப்பியமையினால் பெலியத்த ரயில் நிலையத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை தளர்வுபடுத்திய மூன்றாவது நாளான இன்றும் பெலியத்த ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.10 மணியளவில் கொழும்பு நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளது.
இன்று முதல் ரயில் ஆசனங்களுக்கு சமமான அளவிற்கு ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இதன் காணரமாக பாரிய அளவிலான மக்கள் கூட்டம் ஒன்று பெலியத்த ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளது.
எப்படியிருப்பினும் 4 பயணிகள் மாத்திரம் முன்னரே ஆசனம் ஒதுக்கி கொண்டுள்ளனர். ஒதுக்கிக் கொண்டவர் நால்வரையும், சரியான அனுமதி பத்திரங்கள் வைத்திருந்த 7 பேரும் ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னரே ஒதுக்கிக் கொள்ளாதவர்களுக்கு ரயில்ல செல்ல சந்தர்ப்பம் வழங்காமையினால் அவர்கள் மீண்டும் வீடு நோக்கி செல்ல நேரிட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பயணிகள் ரயில்வே திணைக்கள அதிகாரிகளை கடுமையாக திட்டி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எப்படியிருப்பினும் ரயில் பெட்டிகள் மக்கள் கூட்டமின்றி பயணித்துள்ளதனை காண முடிந்துள்ளது.