இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி கிடையாது என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா முறைமை நீடிக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக், சோமாலியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த வீசா சலுகை நீடிக்கப்படவில்லை.
இதுவரை காலமும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே ஒன் அரைவல் வீசா முறைமை காணப்பட்டது.
எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
சில மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக இலங்கை முதலான நாடுகளுக்கு வீசா சலுகை வழங்கப்படவில்லை என்பது பற்றிய தகவல்களை இந்தியா வெளியிடவில்லை.





