ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!!

956

Vallappattaiஒரு தொகை வல்லப்பட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்கப் பிரிவின் குறித்த நபரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து 16 கிலோ வல்லப்படைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.