வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்!!

444

Mobileவடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறித்த தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் எனினும் தான் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் சத்தியசீலன் தெரிவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.