சந்திரன் ஸ்டோபெரி நிறமாக மாறும் சந்திர கிரகணம் இன்று!!

2668

சந்திர கிரகணம்..

பொசன் பௌர்ணமி தினமான இன்று சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான கல்விப் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமான இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 2.34 மணிக்கு நிறைவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் ஏற்படும் இந்த சந்திர கிரகணம் ஸ்டோபெரி சந்திர கிரகணம் என அமைக்கப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

முழுமையான மற்றும் அரைவாசியான சந்திர கிரகணம் போல் இன்றைய தினம் சந்திரனை நிழல்கள் மறைக்காது என்பதால், இதனை வெறும் கண்களால் காண்பது க டினம் எனவும் சந்தர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்திரனின் ஒளி குறைந்து காணப்படும். இன்றைய தினம் நிகழும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் சமுத்திரங்கள் மற்றும் அந்தாட்டிக்காக கண்டத்திலும் காண முடியும்.

இந்த ஆண்டு 6 கிரகணங்கள் நிகழவுள்ளதுடன் அவற்றில் 4 சந்திர கிரகணங்கள். நெ ருப்பு வளைய சூரிய கிரகணம் மற்றும் முழுமையான சூரிய கிரகணம் என்பனவும் அதில் அடங்கும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நிகழும் நெ ருப்பு வளைய சூரிய கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் தெளிவாக காண முடியுளும் எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.