ரயில் ஓட்டுனர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு!!

414

Trainரயில் ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு சில ரயிலிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று போயா விடுமுறை தினம் என்பதால் தூர இடங்களுக்குச் செல்லவென பயணிகள் கொழும்பு ரயில் நிலையத்தில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் பஸ் நிலையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சில சமயம் ரயில் தாமதமானதால் பயணிகள் அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவங்களும் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்ரது.

மாத்தறை சென்ற ரயிலின் உதவி நேரக்கணிப்பீட்டாளர் மீது மொரட்டுவ ரயில் நிலையத்தில் வைத்து பயணிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.