பலகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் மகாவெலி கங்கையில் குதித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முற்பகல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
27 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.