கணவரின் உடலை பார்த்து கதறிய மௌனிகா!! (படங்கள்)

806

நடிகை மௌனிகாவுக்கு தன் கணவர் மறைந்த பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா 1998ம் ஆண்டு தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004ம் ஆண்டு பகிரங்கமாக உலகுக்கு அறிவித்திருந்தார்.

இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். நேற்று திடீரென மாரடைப்பில் இறந்தார் பாலுமகேந்திரா. தகவலறிந்து, கணவர் உடலைப் பார்க்க ஓடிவந்த மௌனிகாவை, பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.



இதனால் பரபரப்பு கிளம்பியது. பாலு மகேந்திரா மீது அவரது மனைவியான மௌனிகாவுக்கு இல்லாத உரிமையா. அதைத் தடுக்க இவர்கள் யார்? என்ற அளவுக்கு விவாதம் கிளம்ப, உடனடியாக இதில் சுமூகத் தீர்வு காண இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசினர்.

அதன்படி இன்று காலை மௌனிகாவை அழைத்து, பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது சினிமா பட்டறை கூடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

01 1 2