வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தால் முதல் தடவையாக வழங்கப்பட்ட குறுகியகால சுயதொழில் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று (21) வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் வழங்கப்பட்டது.
பாடசாலையை விட்டு விலகிய 37 பேருக்கு சுயதொழிலை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக வழங்கப்பட்ட இப் பயிற்சி நெறியில் காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, நாற்று மேடை தொழில்நுட்பம், சேதன விவசாயம், உணவு பதனிடல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம விருந்தனராக கலந்து கொண்டிருந்ததுடன் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு, தேசிய வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நவீன் ஆட்டிக்கல, வவுனியா பிரதேச செயலாளர் கே. உதயராசா, வவுனியா வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எம். உவைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.