கொரோனா நோயாளி..
மாத்தறையில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ரஷ்ய நாட்டவர் மாத்தறை, பொல்ஹேன பிரதேசத்தில் தங்கியிருந்த சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்,
முச்சக்கர வண்டி சாரகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோருக்கு இன்று பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த ரஷ்ய நாட்டு குழுவினர் இன்றைய தினம் சீன நோக்கி பயணிக்க விருந்தனர். இந்நிலையில் அந்த குழுவிலுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் நால்வர் ஹோட்டலுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட பல இடங்களுக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் சென்ற இடங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான வெளிநாட்டவருக்கு பணி செய்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில், அவர்களுடன் நெருக்கமான பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.