இலங்கைப் பெண்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அவசரமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம்!!

955

47 பேருக்கு கொரோனா..

குவைத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 44 இலங்கை பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்களை தவிர குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரியும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த நிலைமை காரணமாக குவைத்தில் உள்ள இலங்கையின் தூதரக அலுவலகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என குவைத்துக்கான இலங்கையின் தூதரகம் அறிவித்துள்ளது.