
பியகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 500 ரூபா பெறுமதியான 530 போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொண்டவேளை சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான 1800 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
524376 என்ற இலக்கத்தை கொண்ட நாணயத்தாள் கிடைக்கும் பட்சத்தில் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





