கொரோனா சந்தேகத்தில்..
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் குறித்த இளைஞருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி குறித்த இளைஞருக்கு மீண்டும் ஒரு தடவை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்றும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்முடிவு வெளியாகிய பின்னரே தொற்று தொடர்பில் கூற முடியும் என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நபர் அண்மையில் கொழும்பு சென்று வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.