மோர்சிபவன் கவின்..

வவுனியாவில் மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் 28 வருடகால வரலாற்றில் 185புள்ளிகளைப் பெற்று மோர்சிபவன் கவின் என்ற மாணவன்,

பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மோர்சிபவன் கவின் 185, பிரதீபன் டினுசியா 149, ரவிசங்கர் திருசிகா 149, தவராசா திவான் 139 , புண்ணியமூர்த்தி குயின்சிகா 130, கிருஷ்ணகுமார் டசைன் 116, சிவானந்தம் கீர்த்திகள் 109 பள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர் .

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 185 புள்ளிகளைப் பெற்று மோர்சிபவன்கவின் பாடசாலைக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏனைய அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று எமது பாடசாலைக்கு 100சதவீத சித்தியைப் பெற்றுத்தந்துள்ளார்கள் . இக்கிராமப்புற பாடசாலையில் 28 வருடப் பாடசாலை வரலாற்றில் இந்தவருடம் 185 எனும் அதிகூடிய புள்ளிகள் பெறப்பட்டமை விசேடமானதாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இரு மாணவர்களும் 2019 ஆம் ஆண்டு ஒரு மாணவியும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .





