விபத்து..

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார்சைக்கிளில் தனது பிள்ளையை பாடசாலையில் விட்டு மீண்டும் வீடு திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்திற்கு குறித்த பெண் இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

முள்ளியவளை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வருகை தந்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தே மோட்டார்சைக்கிளை மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





