கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு!!

764

கொரோனா..

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் ஐந்து மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

1. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவர் கடந்த 28ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இருதய நோய் மற்றும் கொவிட் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இருதய நோய் மற்றும் கொவிட் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் பக்ரீரியாக தாக்கத்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

5. கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். சுவாசக்குழாய் செயலிழந்தமை மற்றும் கொவிட் காரணமாக ஏற்பட்ட நியூமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.