வவுனியாவில் ஒருவருக்கு கொரோனோ தோற்று உறுதி!!

3092

கொரோனோ..

வவுனியா கல்மடு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கல்மடு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பு கொட்டேனாவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் 14 நாட்கள் குறித்த இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற இளைஞன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2ம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பரிசோதனை பிரகாரம் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து நேற்று இரவு கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.