வவுனியாவில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான விடுதி திறந்து வைப்பு!!

970

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான விடுதி…

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் 25 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோக விடுதி இன்று (10.12.2020) சட்டமா அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டிடம் தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு இராணுவத்தினரின் கட்டுமானப் பணி மூலம் கட்டப்பட்டது.

வட மாகாணத்திற்கான சட்டமா அதிபர் திணைக்கள விடுதியாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தினை சட்டமா அதிபர் தபேர டி லிபேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள நிர்வாக பிரிவு அதிகாரி உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதிபதிகள், வவுனியா அரசாங்க அதிபர், வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், இராணுவ அதிகாரிகள், மத தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.