வவுனியாவில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பம்!!

1429

பாடசாலைகள்..

வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(21.12.2020) முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று திங்கட்கிழமை முதல் திறந்து கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன.