நத்தார்..
இவ்வருட நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய பங்குச் சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு திருப்பலியின் பின்னர் வவுனியா ஆலய மக்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் – 19 நோய்த் தொற்று காரணமாகவும், நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவும் அவர்களுக்காக பிரார்த்திக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் களியாட்ட நிகழ்வுகள் கரோல், ஒளிவிழா என்பனவும், நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகளும் ஆயரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளது.
நத்தார் தினத்தன்று காலை 7.30 மணிக்கு திருப்பலியானது சமூக இடைவெளிகளையும் சுகாதார முறைகளை பின்பற்றியும் ஆலயங்களில் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.