கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு!!

937

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – புளியம்பொக்கனை சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கி பயணிக்கும் வீதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டதில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஆறுமுகம் தட்சயன்(வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.