வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால்14 வயது சிறுமி தற்கொலை : 17 வயது சிறுவன் வைதியசாலையில்!!

821

Loveஅரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் – அடச்சல்தீவு பகுதியைச் சேர்ந்த இவ்விருவரும் காதலித்துள்ளதுடன் வீட்டார் விரும்பாததால் அண்மையில் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மகளை மீண்டும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அவரது பெற்றோர் அறிவித்ததை அடுத்து மனவேதனையில் இருவரும் அரளி விதை உட்கொண்டுள்ளனர்.

சிறுமியின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.