அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் பலாலி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து 97 சுவரொட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.