கொரோனா..
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் நேற்று (24.01.2021) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி,
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் பூஜாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.