கோவில்குளம் பகுதியில்..
வவுனியாவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25.01.2021) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது வீடு நோக்கிச் சென்றுள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த நான்கு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச்சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.