34 பேருக்கு கொரோனா..
கம்பஹா மாவட்டம் பூகொடை பிரதேசத்தில் இயங்கும் முகக்கவசங்களை தயாரிக்கும் ஆடை தொழிற்சாலையில் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவர்களின் இணைப்பாளர்களான ஏனைய ஊழியர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.