கொரோனா தடுப்பூசி..
கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்ததாக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் விசேட வைத்தியர்கள் சபையினால் தடுப்பூசி தயாரித்த பின்னர் அதன் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாத காலமாகும்.
அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவில் இணைந்துள்ள பாதுகாப்பு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் வழங்கப்படும்.
தயாரிக்கப்படும் தடுப்பூசியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடந்த வார இறுதியில் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.