வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை!!

330

Saranar

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை நேற்று (07.03) ஆரம்பமானது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண கல்விப்பணிப்பாளர் வி.செல்வராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இன்று(08.03) ஆரம்பமாகும் நிழக்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.அன்ரன் சோமராஜாவும் மாலை நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனயா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனும் சிறப்பு விருந்தனராக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஆர்.நித்தியானந்தனும் கலந்துகொள்ளவுள்ளதுடன் வவுனியா நகர மணிக்கூட்டுக்கோபுரத்தில் இருந்து கலாசார நிகழ்வுகள் ஆரம்பமாகவும் உள்ளது.

இதன்போது நகரவீதி வழியாக கலாசார பவனியும் இடம்பெறவுள்ளதுடன் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் இரவு நேர நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.