வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் திரு.S.அமிர்தலிங்கம் தலைமையில் நேற்று (08.03) 2.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ந.சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.K.கந்தையா(D.D.E- வவுனியா தெற்கு) அவர்களும், திரு.MP.நடராஜ் (D.E.O- வவுனியா) அவர்களும், திருமதி. சுகந்தி கிஷோர்(செயலாளர் – வவுனியா தெற்கு பிரதேச சபை) அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக திருமதி.M.தேவசேன(I.S.A- ஆரம்ப பாடசாலை) அவர்களும், திரு.S.விஜயகாந்தன் (I.S.A- ஆரம்ப பாடசாலை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
-பாஸ்கரன் கதீசன்-