சுஷ்மா..
இந்திய மாநிலம் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண், வருங்கால கணவர் எடுத்த முடிவால் அமெரிக்காவில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள சம்பவம் உறவினர்களை அ.திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான சுஷ்மா என்பவர் அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் பரத் என்பவருக்கும் மார்ச் 3ம் திகதி பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் முடிவாகியிருந்தது. அமெரிக்காவிலேயே திருமணமும் நடக்கவிருந்த நிலையில், திடீரென்று பரத் தமக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சுஷ்மா, மார்ச் 4ம் திகதி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் அ.திர்ச்சி அடைந்துள்ள சுஷ்மாவின் குடும்பத்தினர் சித்தூர் காவல்துறையை நாடி பு.கா.ர் அளித்துள்ளனர்.
மட்டுமின்றி சுஷ்மாவின் த.ற்.கொ.லை.க்.கு கா.ரணம் பரத் தான் எனவும், அவர் மீது உரிய முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் சம்பவம் நடந்தது அமெரிக்காவில் என்பதால், சட்ட வல்லுநர்களின் உதவியை நாட இருப்பதாக சித்தூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் பின்னரே, இந்த வழக்கு தொடர்பில் உரிய முடிவெடுக்கப்படும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.