மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை : ஜனாதிபதி!!

370

Mahinda

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலருக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும் ஆட்சியை மாற்ற முடியாது.

வெளிநாட்டு சக்திகளின் தாளத்திற்கு ஆட்டம் போட இந்த அரசாங்கம் தயாரில்லை. 2016ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்ய மக்கள், அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர்.

தேர்தலுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அஞ்சியதில்லை, எதிர்க்கட்சிகளுக்கு தேவை என்றால் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியும். இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலையை மீள உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். இந்தக் கடமையை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும்.

எதிர்க்கட்சிகள் பாரியளவில் வங்குரோத்து அடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.